சுவிஸ் தலைநகர் பெர்னில் 1874 ஆம் ஆண்டில் யுனிவர்சல் தபால் யூனியன் நிறுவப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. டோக்கியோ, ஜப்பானில் 1969ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.யு. காங்கிரஸில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.
தேசியசெய்திகள்
கர்நாடகம்
சுகாதாரத்துறை H1N1 க்குஎதிராகஇயங்கத்தொடங்கியது
கர்நாடக சுகாதாரத்துறை H1N1 (அ) பன்றி காய்ச்சலுக்கு எதிரான ஒரு இயங்கத் தொடங்கியது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மாநிலத்தில் காய்ச்சல் தொடர்பான 400 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், தேர்தல் ஆணையம் 500 இளஞ்சிவப்பு[பிங்க்] சாவடிகளை மாநில சட்டசபை தேர்தலில் நிறுவுகிறது.
தெலுங்கானா
NIT வாராங்கல்வைரவிழாகொண்டாட்டம்
தெலுங்கானா, வாரங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுனத்தின் (NIT) வைர விழா கொண்டாட்டத்தை துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்.
சர்வதேசசெய்திகள்
உயரும்உலகவெப்பநிலைபற்றியவிரிவானஎச்சரிக்கைவிடுத்ததுகாலநிலைமாற்றம்குறித்தஐ.நா. குழு
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலைகளின் அபாயங்கள் குறித்து மிக விரிவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகில் தற்போது 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்து வருகிறது.
இந்த அறிக்கை முன்-தொழில்துறை மட்டத்திற்கு மேலே5 டிகிரி செல்சியஸ் இலக்கை வைத்துக் கொள்ள அறிவுரை.
சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி3 சதவீதமாகவும், 2019 ல் 7.4 சதவீதமாகவும் இருக்கும் எனக்கணிப்பு.
IMF ஆய்வுகள்பாலினவேறுபாடுஉற்பத்தித்திறன்வளர்ச்சியைஅதிகரிக்கக்கூடும்என்றுகூறுகிறது
IMF ஆய்வில் இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தித்திறன் வளர்ச்சியை அதிகரிக்க பாலின வேறுபாடு உதவும் எனக்கணிப்பு. பணியிடத்தில் பெண்கள் புதிய திறமைகளை கொண்டு வருவதாக ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
மத்தியஅரசுதங்கபொன்பத்திரங்களைவெளியிடத்திட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து தங்க பொன் பத்திரங்களை 2018-19 ஐ வெளியிட முடிவு.
நியமனங்கள்
மக்களவை எம்.பி. கணேஷ் சிங் – பிறபிற்படுத்தப்பட்டவகுப்புகளின்நலன்பற்றியபாராளுமன்றக்குழுவின்தலைமை
திட்டங்கள்
உயர் மட்ட மூலோபாய கொள்கை குழு அமைப்பு
தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உதவுவதற்காக மூலோபாயக் கொள்கைக் குழு (SPG) அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கான ஆலோசனையை பிரதமரக்கு வழங்கும்.
மனிதநேயமுயற்சிகளுக்கானஇந்தியா
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புது தில்லியில் மனிதநேய முயற்சிகளுக்கான இந்தியாவை அறிமுகப்படுத்தினார்.
‘மனித நேயத்திற்கான இந்தியா’ உலகத்தின் பல நாடுகளில் செயற்கை மூட்டு சிகிச்சை முகாம்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக நடத்தி வருகிறது.
புரிந்துணர்வுஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்தியஅமைச்சரவைஒப்புதல்
இந்தியாமற்றும்தஜிகிஸ்தான்இடையேஒப்பந்தம்
அரசியல் உறவுகள், மூலோபாய ஆராய்ச்சி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், கலாச்சாரம் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
விளையாட்டுசெய்திகள்
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி
ஏக்தா பையான் பெண்களுக்கான கிளப் எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் மோனு கங்கஸ், ஆண்கள் 200 மீ ஓட்டத்தில் ஆனந்தன் குணசேகரன் மற்றும் ஜெயந்தி பெஹராஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
இளைஞர்ஒலிம்பிக்விளையாட்டு
ஆண்கள் 62 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கம் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் ஜெர்மி லால்ரிநுண்கா. ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சந்தீப் சௌதிரி, 1500 மீட்டர் பெண்கள் ஓட்டத்தில் ராஜு ரக்ஷிதா, ஆண்கள் 50 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்க பதக்கம் வென்றனர்.