நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 11, 2020

0
11th February 2020 Current Affairs Tamil
11th February 2020 Current Affairs Tamil

தேசிய செய்திகள்

முதலாவது ‘ஜெருசலேம்-மும்பை விழா’ மும்பையில் நடைபெறுகிறது

“ஜெருசலேம்-மும்பை திருவிழா”  பிப்ரவரி 15 & 16, 2020 அன்று மகாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகத்தில் நடைபெறும். இந்த விழா இரண்டு நகரங்களுக்கிடையில் சிறப்பு தொடர்புகளை உருவாக்கும், மேலும் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் இந்த விழா உதவும்.

பிரபல இஸ்ரேலிய திரைப்படம், தி மொசாட், அதன் திரைப்பட இயக்குனர் அலோன் குர் ஆர்யே முன்னிலையில் இவ்விழாவில் திரையிடப்படும்.

இந்தியாவில் சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டிற்காக வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது

தொழில்நுட்ப உதவியுடன் பசுமை, பாதுகாப்பான மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளை மேம்படுத்த நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டிற்கான ஒரு வலைத்தளத்தை நிலக்கரி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நிலக்கரி சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டிற்கான வலைத்தளம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து செயல்பாட்டு நிலக்கரி சுரங்கங்களையும் சுய மதிப்பீட்டிற்கு உதவுகிறது.

91 முதல் 100% மதிப்பெண் பெற்றால் – 5 நட்சத்திரம் வழங்கப்படும்

81 முதல் 90% மதிப்பெண் பெற்றால் – 4 நட்சத்திரம் வழங்கப்படும்

71 முதல் 80% மதிப்பெண் பெற்றால் – 3 நட்சத்திரம் வழங்கப்படும்

61 முதல் 70% மதிப்பெண் பெற்றால் – 2 நட்சத்திரம் வழங்கப்படும்

41 முதல் 60% மதிப்பெண் பெற்றால் – 1 நட்சத்திரம் வழங்கப்படும்

0 முதல் 40% வரை மதிப்பெண் பெறும் சுரங்கங்கள் எந்த நட்சத்திரத்தையும் பெறாது.

வியட்நாமின் துணை தலைவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்

வியட்நாமின் துணைத் தலைவர் டாங் தாய் ங்கொக் திக் இந்தியாவுக்கு பிப்ரவரி 11 முதல் 13 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . அவர் துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடுவுடன் மற்றும்  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்து  உடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவார்.

புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 13 வது மாநாட்டை இந்தியா பிப்ரவரி 15 முதல் 22 வரை குஜராத் காந்திநகரில் நடைபெற உள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்தியா- பிரிட்டன் கூட்டு இராணுவ பயிற்சி அஜேயா வாரியர் இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்தப்படவுள்ளது

இந்தியாவும் பிரிட்டனும் பிப்ரவரி 13 முதல் 26 வரை சாலிஸ்பரி சமவெளியில் ஐந்தாவது பதிப்பான ‘அஜேயா வாரியர் -2020’ ஐ நடத்துகின்றன. இந்த பயிற்சியில் இந்திய மற்றும் பிரிட்டன் படைகளைச் சேர்ந்த தலா 120 ராணுவ நபர்கள் பங்கேற்பார்கள், அடுத்த பதிப்பு இந்தியாவில் நடத்தப்படும்.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் அதிக எண்ணிக்கையிலான சிப்பாய்களுடன் கூட்டு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு நகர்ப்புற பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவதை தவிற்பதாகும்.

மாநில செய்திகள்

கேரளா

கேரளாவில் ரூ .25 விலையில் 1000 குடும்பஸ்ரீ ஹோட்டல்கள் திறக்கப்படவுள்ளன

கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ரூ 25 க்கு மானியத்துடன் கூடிய உணவு வழங்கும் திட்டத்துக்கு 1,000 ‘குடும்பஸ்ரீ’ ஹோட்டல்களை அமைக்கும் முயற்சியை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டுள்ளார். இந்த முயற்சியின் மூலம் சுமார் 5000 பெண்கள் சுயதொழில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரகாண்ட்

இந்தியாவின் முதலாவது கண்ணாடி பாலம் ரிஷிகேஷில் கட்டப்பட உள்ளது

இந்தியாவின் முதன்முதலாக கண்ணாடி பாலம் வடிவமைக்க உத்தரகாண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாலம் ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்படும். லக்ஷ்மன் ஜுலா பாலத்திற்கு மாற்றாக இந்த கண்ணாடி பாலம் கட்டப்படவுள்ளது. பாலம் வடிவமைப்பை பொதுப்பணித்துறை தயாரித்துள்ளது.

மாநாடுகள்

தேசிய நீர் மாநாடு போபாலில் நடைபெறவுள்ளது

மத்திய பிரதேசத்தில், நீர் நெருக்கடியைத் தீர்க்க தலைநகர் போபாலில்  தேசிய நீர் மாநாடு நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநில அரசு விரைவில் மாநிலத்தில் நீர் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இந்த சட்டம் அமல்படுத்தப்படும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இருக்கும்.

மும்பை மாநகரம் மின் ஆளுமை தொடர்பான தேசிய மாநாட்டை நடைபெற்றது

மின் -ஆளுமை 2020 தொடர்பான தேசிய மாநாடு மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்றது. இ-ஆளுமை தொடர்பான தேசிய மாநாட்டின் இந்த மாநாட்டின் கருப்பொருள் இந்தியா 2020: டிஜிட்டல் மாற்றம் என்பதாகும்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து இந்த மின் ஆளுமை தொடர்பான தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியா 200 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய பிரணாஷ் என்ற ஏவுகணையை உருவாக்குகிறது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 200 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய பிரணாஷ் என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது, இது பிரஹாரின் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையாக இருக்கும்.

விருதுகள்

புல்லேலா கோபிசந்த் ஐ.ஓ.சி.யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்

இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பயிற்சியாளர்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். ஒலிம்பிக் கமிட்டியின் இந்த வாழ்நாள் விருதை பெற்ற முதல் இந்திய பயிற்சியாளர் இவர் ஆவர்.

இந்திய ஹாக்கி வீரர்கள் லால்ரெம்சியாமி & விவேக் சாகர் 2019 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்கள் விருதை வென்றனர்

மிசோரத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர் லால்ரெம்சியாமி 2019 ஆம் ஆண்டின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திர வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நேரத்தில், இந்திய அணியின் மிட்பீல்டர் விவேக் சாகர் பிரசாத் 2019 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளையாட்டு செய்திகள்

ஆதித்யா மேத்தா தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றார்

மகாராஷ்டிரா மும்பையைச் சேர்ந்த ஆதித்யா மேத்தா புனேவில் நடைபெற்ற தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அவர் பல முறை உலக சாம்பியனான பங்கஜ் அத்வானியை தோற்கடித்தார்.

பெண்கள் ஸ்னூக்கர் இறுதிப் போட்டியில், கர்நாடகாவின் வித்யா பிள்ளை 3-2 மதிப்பெண்களுடன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமீ கமானியை தோற்கடித்தார்.

ஐ.டி.எஃப் மகளிர் டென்னிஸ் போட்டியில் அங்கிதா ரெய்னா பட்டம் வென்றார்

தாய்லாந்தின் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நடைபெற்ற சார்பில் மகளிர் இரட்டையர் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய தொழில்முறை டென்னிஸ் வீரர் அங்கிதா ரவீந்தர்கிருஷன் ரெய்னா மற்றும் அவரது கூட்டாளர் நெதர்லாந்தின் பிபியன் ஸ்கூஃப்ஸுடன் வெற்றி பெற்றனர்.

முக்கிய நாட்கள்

பிப்ரவரி 11 அன்று உலக அளவில் அறிவியலில் ஈடுபடும்  பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்க பிப்ரவரி 11 அன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினத்தை கொண்டாடுகிறது.

உலக யுனானி தினம் பிப்ரவரி 11, 2020 அன்று அனுசரிக்கப்பட்டது

உலக யுனானி தினம் பிப்ரவரி 11, 2020 அன்று 2017 முதல் கொண்டாடப்பட்டது. இந்த நாள் சிறந்த யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான “ஹக்கீம் அஜ்மல் கான்” பிறந்த நாளைக் குறிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்த 4 வது யுனானி தின விழாவின் முதன்மை விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

Download PDF Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!