தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வரின் முடிவு என்ன!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மக்களின் நலனில் அக்கறை கண்டு அரசும் பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். இதுமட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்லும் பொது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் எச்சரிக்கப்பட்டது. மேலும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைந்தது. இதனால் மக்கள் ஒரு இரண்டு மாதங்களாக சுதந்திரமாக பொது இடங்களில் நடமாடி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பழையபடி மாஸ்க் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என மக்கள் பீதியில் உள்ளனர்.
ExamsDaily Mobile App Download
நேற்று மட்டுமே தமிழகத்தில் புதிதாக 52 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 பாதிப்புகள் சென்னையில் மட்டுமே பதிவாகியுள்ளது.கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கு விதிமுறைகளை அதிகப்படுத்துவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்களிடம் சோதனைகளை அதிகமாக மேற்கொள்வது, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுதல் மற்றும் சென்னையில் அதிக பாதிப்புகள் பதிவாவதால் சென்னையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.