தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்!

0
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்!

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு பிறகு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு வகுப்பு மற்றும் பாடவாரியாக கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி இன்று பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் ஆண்டுத்தேர்வு தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வுடன் கூடுதலாக 4 சலுகைகள்? முழு விவரம் இதோ!

அதன் தொடர்ச்சியாக மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதத் தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருகிறது. தேர்வுத்துறை அலுவலர், வழித்தட அலுவலர், நிற்கும் படை அலுவலர், பறக்கும் படை அலுவலர், அறை துணை கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் அரசு பொதுத் தேர்வின் போது ஆசிரியர்களை ஈடுபடுத்த உள்ளனர்.

ExamsDaily Mobile App Download

 

இவ்வாறு தேர்வு பணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சில தேர்வு மையங்களுக்கு செல்ல சரியான நேரத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சிரமப்படுவார்கள். அதனால் தேர்வுத் துறை போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். பணியாற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் ஆசிரியர்களை கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!