மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வுடன் கூடுதலாக 4 சலுகைகள்? முழு விவரம் இதோ!
கடந்த மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 34% அகவிலைப்படி தொகையுடன் இப்போது கூடுதலாக 4 சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
கூடுதல் சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 3 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, அவர்களின் சம்பள உயர்வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் பல்வேறு அலவன்ஸ்கள் அதிகரிக்க இருக்கிறது. அந்த வகையில் டிஏ அதிகரிப்புடன் ஊழியர்களுக்கான பயண உதவித்தொகை மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு உதவித்தொகையும் அதிகரிக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனுடன், ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் தானாகவே அதிகரிக்கும்.
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
உண்மையில், மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை சம்பளம் ஆகியவை அகவிலைப்படியில் இருந்து கணக்கிடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், டிஏ அதிகரிப்பால், பிஎஃப் மற்றும் கிராசுவிட்டி அதிகரிப்பது உறுதியாகி இருக்கிறது. இதுமட்டுமின்றி, டிஏ அதிகரிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பயணப்படி உயரும். இந்த உயர்வு 3 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் 30 அன்று, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 3 சதவீதம் உயர்த்தியது.
ExamsDaily Mobile App Download
இதன் காரணமாக அவர்களின் அகவிலைப்படி 9 மாதங்களில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி 34 சதவீத DA மற்றும் DR தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பால் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். ஆனால், இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9544.50 கோடி சுமை அதிகரிக்கும். இதற்கிடையில், 18 மாத கால DA நிலுவைத் தொகைக்காக மத்திய பணியாளர்கள் அமைப்பு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.