தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு? கல்லூரி மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று!
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை உயிர் கொல்லி வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து கொரோனா அலைகளை ஏற்படுத்தியது. இதில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அதிகப்படுத்தியது. தமிழகத்தில் இந்த வகை வைரஸ் தொற்றால் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் பயனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்தது. இந்த நிலையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் கடந்த மாதம் முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 171-ஆக அதிகரித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
அதனை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 25 மாணவர்கள் விடுதி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.