தமிழக பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பெல்லோஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது மேலும் இந்த திட்டத்தை வலுப்படுத்த தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இதில் முதலாவதாக பெல்லோஷிப் திட்ட பணிகளை மேற்கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜூலை 2022ம் ஆண்டு முதல் ஜூன் 2024ம் ஆண்டு வரை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
இதில் Fellows பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் உயர்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பணியிடத்தில் 2 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதில் Senior Fellows பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டமும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பணியிடத்தில் 5 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இதில் Senior Fellows மற்றும் Fellows பணியிடத்திற்கு முறையே ரூ.45,000 மற்றும் ரூ.32,000 மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
வீட்டிலிருந்து வேலை (WFH) பார்ப்பவரா நீங்கள்? ஆரோக்கியத்தை பேணும் எளிய வழிகள் இதோ!
இதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி, பணி அனுபவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்துடன் விண்ணப்பத்தார்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வருகிற ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://tnschools.gov.in/wp-