இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக மார்ச் 31க்குள் நீக்கம்? ஒன்றிய அரசு கடிதம்!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படு வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முழு ஊரடங்கு
சீனாவில் முதன் முதலில் கடந்த 2019ம் ஆண்டு வுகான் நகரில் கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இது உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் உருவான கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவியது.
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் இந்தியாவில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் பரவத் தொடங்கியது. அதனால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலும் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டது.
இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.