IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிட்னஸை நிரூபிப்பாரா ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் சாஹர்?
தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தங்களது ஃபிட்னஸை நிரூபித்து IPL போட்டிகளுக்காக விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
CSK அணி:
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர் இந்த 15வது சீசனுக்கான பயிற்சி ஆட்டத்தை ஏற்கனவே சூரத்தில் தொடங்கியுள்ளனர். இந்த பயிற்சி ஆட்டத்தில் CSK அணியின் கேப்டன் MS தோனி, உத்தப்பா, சிவம் துபே உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். என்றாலும் CSK அணியின் மிக முக்கிய தூண்களாக கருத்தப்படக்கூடும் சில வீரர்களுக்காக அணி நிர்வாகம் காத்திருக்கிறது. இதில் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரின் உடற்தகுதி மீதும் பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
அதாவது CSK அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ருதுராஜுக்கு கையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அவர் இந்திய அணியின் சார்பில் சில தொடர்களில் கலந்து கொள்ளவில்லை. தவிர, சமீபத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது தொடை காயத்தால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த 2 வீரர்கள் அணிக்கு திரும்புவது குறித்து CSK CEO காஷி விஸ்வநாதன் கூறுகையில், ‘அவர்களின் தற்போதைய உடற்தகுதி நிலை குறித்து எங்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்போது அணியில் சேருவார்கள் என்பதை சரியாக சொல்ல முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 25 வயதான ருதுராஜ், IPL 2021ல் CSK அணிக்காக விளையாடி அதிக ரன் குவித்திருந்தார். மேலும் இந்த சீசனுக்கு முன்னதாக CSK நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்ட முக்கிய வீரரும் ஆவார். அதே போல, ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு CSK அணியில் இடம்பிடித்த சாஹர் முழு IPL போட்டியிலும் இல்லாவிட்டாலும் இந்த போட்டியின் முதல் கட்டத்தை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த இரு வீரர்களும் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (மார்ச் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த சிகிச்சை முடிந்ததும், இவர்கள் பல்வேறு உடற்தகுதி சோதனைகளில் பங்கேற்ற பிறகு IPL போட்டிகளில் பங்கேற்க அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும். அதன் பின்னரே அவர்கள் CSK அணியில் இணைய முடியும். இதற்கிடையில் வரும் மார்ச் 26ம் தேதி துவங்க இருக்கும் இந்த IPL சீசனுக்கான முதல் போட்டியில் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடன் பலப்பரீட்சை காண இருக்கிறது குறிப்பிடத்தக்கது.