தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி – குளறுபடியால் விவசாயிகள் போராட்டம்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - குளறுபடியால் விவசாயிகள் போராட்டம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - குளறுபடியால் விவசாயிகள் போராட்டம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி – குளறுபடியால் விவசாயிகள் போராட்டம்!

தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் சிக்கல்கள் இருந்து வருவதால் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

பயிர்க்கடன் தள்ளுபடி:

திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 50,087 விவசாயிகள், விளை நிலங்களில், பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்வதற்கு பயிர்க்கடன் பெற்றிருந்தனர். அடங்கல் பதிவேட்டில், குறிப்பிடப்படும், சாகுபடியை பொறுத்து, பயிர்க்கடன் தொகை, கூட்டுறவு சங்கத்தில், ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயிர்களுக்கு குறைந்தளவும், தோட்டக்கலை மற்றும் தென்னை உட்பட நீண்ட கால பயிர்களுக்கு, கூடுதலாகவும், பயிர்க்கடன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசு விவசாயிகள், பெற்றிருந்த பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தில், முறைகேடுகளை தவிர்க்க பயனாளிகள் பட்டியலை சரிபார்க்க பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் கூட்டுறவுத் துறையினர் குளறுபடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31% ஜூலை 1 முதல் அமல் – குஷியோ குஷி!

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கடன் பெற்ற 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அடங்கல் பதிவில் குளறுபடி என்ற காரணத்தின் அடிப்படையில் தள்ளுபடியை மறுத்து வருவதாகவும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தவிர வேறு வழி இல்லை என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!