மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31% ஜூலை 1 முதல் அமல் – குஷியோ குஷி!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூய்தியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியபடியானது 3% அதிகரிக்கப்பட்டு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR உயர்வை நிலுவையில் வைத்தது. இதனால் முன்னதாக 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 ஆகிய மூன்று தவணைகளுக்கான DA உயர்வு வழங்கப்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சேமித்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவசம் போர்டு அறிவிப்பு!
இறுதியாக 17% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சகம் கடந்த 3 நிலுவை தவணை DA வை ஜூலை 1 வழங்குவதாக அறிவித்தது. இதற்கான அகவிலைப்படி உயர்வு முறையே 4%, 3% மற்றும் 4% ஆக வழங்கப்பட்டது. இதனால் அகவிலைப்படி உயர்வானது 28% ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது 2021 ஜூலை 1ம் தேதி முதலான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் 23ம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 3% DA உயர்வளிக்கப்பட்டு, டிஏ விகிதம் 31 சதவீதமாக மாறும்.
இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அரசின் இந்த அறிவிப்பினால், 47 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு 34,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,488.70 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.