இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இரவு ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு, திரையரங்குகளில் 50% அனுமதி – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அசாம் மாநிலத்தில் முழுவதும் கோவிட் வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதால், அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகளை அறிவித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்:

அசாம் மாநிலத்தில் அக்டோபர் 8 முதல் தினசரி கொரோனா பாதிப்புகள் 300 க்கும் குறைவாக மட்டுமே பதிவாகி வந்தது. ஆனால் 11 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 19 அன்று மீண்டும் 300 என்ற எண்ணிக்கையை தாண்டி உள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை நிலவரப்படி இதுவரை மாநிலத்தில் 6,08,915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நேர்மறை விகிதம் 0.65 சதவீதமாக குறைந்துள்ளது என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் – அரசாணை வெளியீடு!

மாநிலம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால், அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நேரத்தை தளர்த்தியுள்ளது. இதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அசாம் அரசு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட தலைமை செயலாளர் ஜிஷ்ணு பருவா, அசாம் மாநிலத்தின் தகுதியான மக்களில் 31 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தில் கொரோனா நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். அரசின் புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

  • அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்த்ராவின் படி, இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
  • திருமணங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் அதிகபட்சமாக 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இறுதி சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • மத வழிபாட்டு தலங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!