PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மீண்டும் கோவிட்-19 அட்வான்ஸ்! அரசு அனுமதி அளிக்குமா?
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலையின் போது ஊழியர்களின் PF கணக்கில் இருந்து தேவையான அட்வான்ஸ் தொகை எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த வகையில் தற்போது மூன்றாவது கொரோனா அலை நிலவி வருவதால் கோவிட்-19 அட்வான்ஸ் தொகை அறிவிப்பு மீண்டும் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 அட்வான்ஸ் தொகை:
இந்தியா முழுவதும் முதல் அலை, இரண்டாம் அலை என அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, மீண்டும் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆக நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட தாக்கத்தினால், தொற்று பாதித்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் வேலைவாய்ப்பின்மை நிலவி வந்தது. இந்த வகையில் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு பணி நீக்கம், பாதி சம்பளம் என அறிவிக்கப்பட்டு அதிக பாதிப்பை எதிர்கொண்டனர். இந்த அடிப்படையில் உலக அளவில் அதிக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு!
இந்த வகையில் பணியாளர்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்கும் முயற்சியில் அரசு அறிவித்த திட்டம் தான் கோவிட்-19 அட்வான்ஸ். இந்த வகையில் கோவிட்-19 அட்வான்ஸ் என்பது PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், தனது PF கணக்கில் இருக்கும் தொகையில் அதிகபட்சமாக 75% வரை கோவிட்-19 அட்வான்ஸ் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், PF கணக்கில் இருக்கும் தொகையை, எந்த காரணங்களுக்கெல்லாம் கணக்கில் பணம் எடுக்கலாம் என்ற பட்டியல் உள்ளது. இந்த வகையில் இந்த தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
மேலும் அதிகபட்ச தொகையாக 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ தொகை அல்லது PF கணக்கில் இருக்கும் மொத்த இருப்பில் 75% தொகை, இந்த இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில் ஊழியர்களின் எதிர்பாராத மருத்துவ செலவு, பணி நீக்கம், சம்பள குறைவு என்று பிரச்சனைகளை எதிர்கொண்ட ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு அதிக பலன் அளித்தது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால், சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகிறது. எனவே PF கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதி அளிக்க, அரசு மீண்டும் பரிசீலிக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.