இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
டெல்லியில் கொரோனா தொற்று நோய் சரிவுக்கு மத்தியில் இன்று (பிப்.7) முதல் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு ஊரடங்குச் சட்டம் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
பள்ளிகள் திறப்பு:
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நிலவி வரும் கொரோனா தொற்றின் 3ம் அலையை தடுக்கும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகள் சரிவடைந்து வருவதால் இன்று (பிப்.7) முதல் அரசு சில தளர்வுகளை அமல்படுத்த இருக்கிறது. இதற்கு முன்னதாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் பைஜால் தலைமையில் நடைபெற்ற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் இனி 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு DA, DR உயர்வு – கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இப்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று (பிப்.7) முதல் மீண்டும் தொடங்கியது. அதே போல நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனுடன் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத வருகையுடன் செயல்பட உள்ளன. மேலும் அரசு உத்தரவின்படி, கார் ஓட்டுநர்கள் வாகனத்திற்குள் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – பிப்.8ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம்!
மேலும் ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அனைத்தும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதே போல வணிகம் முதல் அனைத்து கண்காட்சிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு நாளும் உணவகங்கள் காலை 11 மணி வரை செயல்படலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று (பிப்.6) ஒரு நாளில் 1,410 புதிய பாதிப்புகள் மற்றும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 2.45 சதவீதமாக குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறை தரவுகள் தெரிவித்துள்ளது.