தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – மாணவர்களை மேம்படுத்த திட்டம்!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாணவர்களை மேம்படுத்த திட்டம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாணவர்களை மேம்படுத்த திட்டம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – மாணவர்களை மேம்படுத்த திட்டம்!

2019–2020, 2021–2022 ல் கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேரடி வகுப்பில் படிக்காமல் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ உத்தரவில் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்களின் அடிப்படை கல்வியை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 -ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஒன்று, இரண்டாம் வகுப்புக்கு நேரடி வகுப்பு இல்லாமல் ‘ஆல்பாஸ்’ ஆன அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை மேம்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற தலைப்பில் நவீன முறையில் கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் மாவட்டம்தோறும் கருத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களை சோ்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியா் கருத்தாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கருத்தாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜானகி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகையன் ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் குமார், இளங்கோவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

இதேபோல், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில கருத்தாளர் பயிற்சி வகுப்பில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் காமராஜ், மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலையில் கருத்தாளர்கள் அபூா்வா, கார்த்திக் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, உதவிப் பேராசிரியர் ஏஞ்சலின் ரூபி ஆகியோர் பார்வையிட்டு கருத்தாளர்கள் அளிக்கப்படும் பயிற்சி பற்றி கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!