தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
கடந்த மாதத்தில் முடிவடைந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளாததால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடைத்தாள் திருத்தம்
தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் முடிவடைந்து தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. இப்போது, மே மாதத்தில் முடிவடைந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஜூன் 1ம் தேதியன்று சுமார் 83 மையங்களில் துவங்கியது. இதற்காக பிரத்யேக கையேடு தயாரிக்கப்பட்டு அவை விடைத்தாள் முகாம் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மண்டல முகாம் அலுவலர்கள், முகாம் அலுவலர், முதன்மை தேர்வாளர் பணிகள், கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள், உதவி தேர்வாளரின் பணிகள் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு முறையான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு ஆசிரியர்களின் வருகை குறைவாக இருப்பதால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்ட மாநில பள்ளிக்கல்வித்துறை, விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு உடனடியாக வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.