தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து உள்ளது.
விலக்குகள் அளிக்கப்படுமா..?
இந்தியா முழுவதும் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்ற கேள்வி பரவலாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பிரிக்கப்பட்டு உள்ள பச்சை மற்றும் ஆரஞ்சு மாவட்டங்களில் மே 3ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மே 3க்கு பிறகு சென்னை உட்பட 130 நகரங்கள் முடக்கம் – மத்திய அரசின் ரெட்ஜோன் லிஸ்ட்..!
சிவப்பு மண்டலங்களில் எவ்வித தளர்வும் வழங்கப்படாமல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சிவப்பு நிற மாவட்டங்கள்:
சென்னை
மதுரை
நாமக்கல்
தஞ்சாவூர்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருப்பூர்
ராணிப்பேட்டை
விருதுநகர்
திருவாரூர்
வேலூர்
காஞ்சிபுரம்
ஆரஞ்சு நிற மாவட்டங்கள்:
திண்டுக்கல்
தேனி
தென்காசி
நாகப்பட்டினம்
விழுப்புரம்
கோவை
கடலூர்
சேலம்
கரூர்
தூத்துக்குடி
திருச்சி
திருப்பத்தூர்
கன்னியாகுமரி
திருவண்ணாமலை
ராமநாதபுரம்
திருநெல்வேலி
நீலகிரி
சிவகங்கை
பெரம்பலூர்
கள்ளக்குறிச்சி
அரியலூர்
ஈரோடு
புதுக்கோட்டை
தருமபுரி
பச்சை நிற மாவட்டம்:
கிருஷ்ணகிரி
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |