தமிழகத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் நான்காம் அலை துவங்கி விட்ட நிலையில் தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. மேலும் இந்த கொரோனா தொற்றால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் உயிர்களை விட்டனர். அதனை தொடர்ந்து தமிழக அரசும் மக்களின் நலனுக்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இரு தவணையாக அறிமுகப்படுத்தபட்டது. மேலும் இந்த தடுப்பூசி இரு வகைகளாக இருந்தது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் இருக்கும் முக்கால்வாசி பொது மக்கள் இந்த தடுப்பூசிகளை செலுத்தி விட்டனர். அதனை தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையும் வந்து மீண்டும் தற்போது தமிழகம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் நான்காம் அலை தலை தூக்கி உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இரு தடுப்பூசிகளையும் செலுத்தி விட்ட காரணத்தால் இந்த அலையில் இருந்து பொது மக்களை காப்பாற்றி விடலாம் என்று தமிழக அரசு சுகாதார துறை அறிவித்துள்ளது. இது தவிர 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு விளக்கம் ஒன்றை தெரிவித்து உள்ளார்.

Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

அவர் தெரிவித்த அறிக்கையில், 6 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும்,மேலும் இதற்கான கணக்கெடுப்புகளும் நடைபெற்று வருகிறது என்றும், அதனை தொடர்ந்து மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி வந்தவுடன் தமிழ்நாட்டில் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!