தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் தினசரி பாதிப்பு ஒரு நாளைக்கு 8 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீறினால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் தற்போது தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவித்துள்ளபடி, வழக்கறிஞர்கள், வழக்காடிகள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் அத்துடன் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் – பரவல் எதிரொலி!

இது தொடர்பாக தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி தெரிவித்திருப்பதாவது, பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வழக்கு விசாரணைக்கு உட்பட்ட வழக்காடிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நீதிமன்ற கட்டிடத்திற்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 20ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே இருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!