இந்தியாவில் மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா – 21,880 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா - 21,880 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா - 21,880 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா – 21,880 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 21,880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,38,47,65 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 5,25,930 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பில் இருந்து 21,219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை சுமார் 4,31,71,653 பேர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் விரைந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 201 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. மேலும், இனி வரும் நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறுகின்றனர். இந்த நிலையில் அரசு நோய்த் தடுப்பு பணியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!