தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இந்த ஆண்டு கடந்த மே 29ம் தேதி அன்றே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. ஏற்கனவே கணித்ததை விட மிக கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன் மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று (ஜூலை 22) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.288 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!