மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு திடீர் அறிவிப்பு! தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!

0
மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசு திடீர் அறிவிப்பு! தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!
மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - அரசு திடீர் அறிவிப்பு! தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!
மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு திடீர் அறிவிப்பு! தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அதிக தொற்றும் தன்மை கொண்ட லேசான அறிகுறிகளுடன் கூடிய ஒமைக்ரான் பரவலால், கொரோனாவானது சிக்கலான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை புறக்கணித்ததும் கொரோனா பரவலுக்கு பெரும் பங்காற்றி உள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

சீனாவின் உகான் நகரில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்பு இந்த தொற்றின் வேகம் உச்சம் தொட்டதால், அந்நாடு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் அந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இதன் பலனாக பல நாடுகளில் தொற்றின் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. ஆனால் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக தலைநகர் பீஜிங், சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜிங் நகரின் ஹைதியான் மாவட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அதனுடன் சாவோயாங், பெங்தை, சன்யி மற்றும் பங்ஷான் ஆகிய மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என அரசின் நகர செய்தி தொடர்பாளர் சூ வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு & கட் ஆஃப் குறித்த முழு விவரம் இதோ!

இந்த அறிவிப்பின்படி, மே 23 லிருந்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து இடங்களும், உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. பீஜிங்கில் இயற்கையாக அமைந்த அனைத்து மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் மக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. எனினும் பூங்காக்களில் 30 சதவீதம் பேர் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!