TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு & கட் ஆஃப் குறித்த முழு விவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு, தேர்வு முடிவுகள் வெளியீடு மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்த விவரங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.
குரூப் 2 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த மாதம் மே 21ம் தேதியன்று குரூப் 2 தேர்வை நடத்தியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். இப்போது, சுமார் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்றும், ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், குரூப் 2 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது குரூப் 2 தேர்வு முடிவுகளை பொருத்தளவு தமிழ் மற்றும் கணித தாள்கள் மட்டும் எளிமையாக இருந்ததாகவும், தவிர பொது அறிவு பிரிவு கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தபட்சமாக இருந்தால் போதுமென கணிப்புகள் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!
அந்த வகையில், பொது பிரிவினருக்கு 165 முதல் 175 வரையிலும், BC, MBC, BCM போன்ற பிரிவுகளுக்கு 155 முதல் 165 வரையிலும், SC பிரிவினருக்கு 150 முதல் 160 வரையிலும், ST பிரிவினருக்கு 145 முதல் 155 வரையிலும் கட் ஆப் மதிப்பெண்கள் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் இதற்கும் குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது குரூப் 2 முதல்நிலைத் தேர்வுகள் முடிந்தவுடன் வரும் செப்டம்பர் மாதத்தில் மெயின் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.