தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமோ என்று பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து வகையான தொழிற்துறைகளும் வணிக துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் ஒரு நாள் பாதிப்பு 100ஐ தாண்டி பதிவாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
ஆனால் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் வீரியம் மிகக் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இதுவரை என்ன காரணமாக இருக்கும் என்று கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் பள்ளி, கல்லூரி மற்றும் குடும்பத்தில் ஏதேனும் ஒரு நபருக்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது .