தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுதாத 6. 79 லட்சம் மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2021 – 2023ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன் படி 1 – 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மே 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இத்தேர்வானது மே 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14ம் முதல் அம்மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. அதனை தொடர்ந்து 10,11,12 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 6 முதல் 8% வரை சம்பள உயர்வு!

ஆனால் இந்தாண்டு பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட பணியாக விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்கு பிறகு 1 – 9 வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பில் 1.95 லட்சம் மாணவர்களும் 10 ஆம் வகுப்பில் 2.25 லட்சம் மாணவர்களும் 11ஆம் வகுப்பில் 2.58 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 6,79,467 பேர் பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை என்று தேர்வுகள் இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!