TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 6 முதல் 8% வரை சம்பள உயர்வு!
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் லிமிடெட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் ஊழியர்கள் இன்றும் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். இந்த கல்வியாண்டில் நிறுவன ஊழியர்களுக்கு 6% முதல் 8% வரைக்கும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள உயர்வு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்கவில்லை. Work From Home மூலமாக தான் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான Infosys, HCL நிறுவனம் போன்ற நிறுவனங்கள் பழையபடி ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர்.
ஆனால், டாடா கன்சல்டன்சி சர்விசஸ் லிமிடெட் நிறுவனம் (TCS) மட்டும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய ஊக்குவிக்கின்றன. தற்போது வரை மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்து ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அலுவலங்களுக்கு வந்து வேலை பார்த்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் தனது ஊழியர்களை ஹைப்ரிட் மாடலில் பணிபுரிய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. தற்போதைக்கு 8% மூத்த நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து TCS நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2022-23 நிதியாண்டில் 6% முதல் 8% வரைக்கும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.