பள்ளிகளில் மீண்டும் அமலாகும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – புதிய பாதிப்புகள் எதிரொலி! அரசு நடவடிக்கை!

0
பள்ளிகளில் மீண்டும் அமலாகும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் - புதிய பாதிப்புகள் எதிரொலி! அரசு நடவடிக்கை!
பள்ளிகளில் மீண்டும் அமலாகும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் - புதிய பாதிப்புகள் எதிரொலி! அரசு நடவடிக்கை!
பள்ளிகளில் மீண்டும் அமலாகும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – புதிய பாதிப்புகள் எதிரொலி! அரசு நடவடிக்கை!

டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் ஆஃப்லைன் வகுப்புகளை தொடரும் என்றும் முறையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் எல்லா நேரத்திலும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்கள்

நாடு முழுவதும் கொரோனா 4ம் அலைக்கான அச்சம் எழுந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. சமீபத்தில், டெல்லியில் உள்ள சில பள்ளிகளில் கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதாலும், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகளை மூடுவதற்கு எதிராக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த சூழலில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடரும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 3 வரை விடுமுறை – சூப்பரான அறிவிப்பு!

இருப்பினும், தேவையான அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லியில் பள்ளிகள் மூடப்படாது. வழக்கம் போல ஆஃப்லைன் வகுப்புகள் தொடரும். பள்ளிகள் அனைத்து கொரோனா பாதிப்புளையும் கல்வித் துறையிடம் தெரிவிக்கவும், நோய் தடுப்பு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பள்ளிகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ExamsDaily Mobile App Download

 

இதனை தொடர்ந்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பள்ளிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல்லி-என்சிஆர் முழுவதும் உள்ள பள்ளிகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பரவுவதை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்தவும், இதனால் வளாகத்தை மூடுவதைத் தவிர்க்கவும் அடிக்கடி சுத்தப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!