ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – கூடுதல் டிக்கெட் முன்பதிவு செய்ய எளிய வழிமுறைகள்!
இந்தியாவில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான விதிமுறையை IRCTC மாற்றியுள்ளது. அதன்படி தற்போது அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
IRCTC:
இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைவால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 3 வரை விடுமுறை – சூப்பரான அறிவிப்பு!
அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் தற்போது கூடுதல் சலுகையாக ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியையும் ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கு நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை IRCTC இணைந்திருப்பது அவசியமாகும். IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். ஆன்லைன் மூலம் இத்தகைய வேலைகளை எளிதாக செய்யலாம்.
ExamsDaily Mobile App Download
- முதலில் irctc.co.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
- அடுத்ததாக முகப்புப் பக்கத்தில் தோன்றும் ‘My Account’ பகுதிக்குச் சென்று, ‘Aadhaar KYC’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிறகு அதில் ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘மொபைல் எண்ணிற்கு Send OTP’ SEND செய்து ஆதார் தொடர்பான தகவல்களை சரிபார்த்து verify’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இறுதியாக KYC விவரங்கள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதாக உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்