இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா – 4 கோடியை தாண்டிய பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!

0
இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா - 4 கோடியை தாண்டிய பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா - 4 கோடியை தாண்டிய பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா – 4 கோடியை தாண்டிய பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷாக் ரிப்போர்ட்:

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஓமைக்ரான் 3ஆம் அலைக்குப் பின்னர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்து இருந்தது. கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகளும் வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. இந்த நோய் பரவலுக்கு ஓமைக்ரான் BA5 வகை கொரோனா வைரசே முக்கிய காரணமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. அதேபோல் கொரோனா பரவலை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் மீண்டும் 1 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இதனை அடுத்து இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • அதன்படி, புதிதாக 14,506 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,33,345 ஆக உயர்ந்தது.
  • மேலும், புதிதாக 30 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்தது.
  • குறிப்பாக, தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,574 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,08,666 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்நிலையில், இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,602 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் 1,97,46,57,138 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,44,788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!