சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று – அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
உலக மக்கள் யாரும் எதிர்பார்க்காத, அளவுக்கு அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா சில மாதங்களாக குறைந்து வந்தது. இதனால் கொரோனா முழுமையாக ஒளிந்து விட்டது, என இயல்பு நிலைக்கு திரும்பிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் சீனாவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா:
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜீங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Exams Daily Mobile App Download
கடந்த காலங்களில் இந்த திட்டம் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் குறிப்பாக ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தலைநகர் பெய்ஜிங் நகரில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள், ஜிம்கள் வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு உள்ளன. மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2020 ஆம் ஆண்டைப் போல சீனாவில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தொழில்துறையினர் சார்பில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. முன்னதாக சீன பொருட்களின் விற்பனை உலகளவில் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஊரடங்கு உள்ளிட்டவை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா குறையும் பட்சத்தில் ஊரடங்கில் தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என சீன அரசு தெரிவித்து உள்ளது.