தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, மாத சம்பளம் ,தேர்வு செய்யப்படும் முறை, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் பல்வேறு கோவில்கள் இயங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் மனநல மருத்துவர், செவிலியர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். இதில் பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியில் சேருபவருக்கு ரூ.9,000 முதல் ரூ.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://palanimurugan.hrce.tn.