தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் உடனடியாக அதனுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் விரைவாக இந்த வேலையை செய்யுமாறு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு ரேஷன் கார்டு ஒரு வாழ்வாதாரமாக மாறி விட்டது. மேலும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்து தான் சாமானிய மக்கள் தங்கள் வாழ் நாளை கழித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்ற ஆண்டு திமுக அரசின் சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டார். மேலும் அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் சாமானிய மக்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இரு தவணையாக ரூபாய் 2000 வழங்கப் பட்டது. அதனை தொடர்ந்து தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப் பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் உள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரேஷன் கார்டுகளை பெற முடியும். முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது. தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது. நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வில்லை என்றால், வரும் ஜூன் 30 2022க்குள் அதை செய்து முடிக்கவும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அகவிலைப்படி (DA) அறிவிப்பு?
இந்நிலையில் இணைக்க தேவையான ஆவணங்கள், ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ். ஆன்லைனில் இந்த ஆவணங்களை கொண்டு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் start now என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும். பின்பு ration card benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் வரும் OTP ஐ நிரப்பிய பிறகு, தங்களின் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள். அதன் பின்னர் ஆதார் கார்டு சரிபார்க்கப்பட்டது என்று SMS மூலமாக உங்களுடைய மொபைல் நம்பருக்கு வந்து விடும். அதுமட்டுமில்லாமல் இந்த செயலை நேரடியாக ரேஷன் கார்டு மையத்திலும் சென்று இணைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் உடனடியாக இந்த வேலையை செய்து முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.