இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு – மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் ஆமை வேகத்தில் கொரோனா 4ம் அலை பரவி வருகிறது. மராட்டியம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தொற்று பரவல் அதிவேகத்தில் பரவி வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சுகாதாரத்துறை மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொடிய கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக பணம் பெற்றவர்கள் முதல் பணம் இல்லாதவர்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வந்தனர். பொது தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
முதல் தனியார் ரயில் சேவை துவக்கம் – அதிர வைக்கும் டிக்கெட் கட்டணம்! அதிர்ச்சியில் பயணிகள்!
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வந்தது. அதன்படி, தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா நான்காவது அலை பரவி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எட்டு ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் தொற்றுக்கு பாதிப்பு படைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அதி தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது, கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை என்றும், அதனால் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும் படியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் பாதிக்கப்படும் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றும், அப்படி போடப்பட்டதை உறுதி செய்வதற்காக நமது சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.