தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு? அமைச்சரின் புதிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும், கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்து கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இருப்பினும் தற்போது தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மக்களை அதிக அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சில நாடுகளில் கொரோனாவுடன் வாழ பழகி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசிகள் மட்டும்தான் இந்த கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி. அதனால்தான் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை? புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இதன் மூலம் 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 634 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் 30-வது தடுப்பூசி முகாம் கடந்த ஜூன் 13 அன்று நடந்தது. இந்த முகாமில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 60 வயதை கடந்தவர்கள், 60 வயதை கடந்து இணை நோயுள்ளவர்கள், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தகவல் தெரிவித்துள்ளார்.