தமிழக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை? புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு துறைகளை மேம்படுத்த நலத்திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட 3 வகையான துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஆலோசனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது ஒவ்வொரு துறைகளிலும் வளர்ச்சியை மேம்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதனால் தமிழக முதல்வர் துறைவாரியாக முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இதில் முதற்கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆலோசனை நடத்தினார்.
Exams Daily Mobile App Download
இதில் முதல்வர் வழங்கிய ஆலோசனைகளான, தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், கிராம நிா்வாக அலுவலர்கள் உள்ளிட்ட இடங்களில் சேவைகள் தாமதமின்றி கிடைத்திட வேண்டும். அத்துடன் வருவாய் துறையின் சார்பில் தினமும் 25க்கும் மேற்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து ஆன்லைன் வாயிலான பட்டா பரிமாற்றத்தின் போது கால தாமதம் ஏற்படாதவாறு இருக்க வேண்டும். இது போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாடு: சென்னையில் 11 சென்டி மீட்டர் மழை பதிவு – வானிலை மையம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து நேற்று மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது முக்கிய 3 துறைகளான பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.