மே 5 முதல் பகுதி நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே 5ம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஊரடங்கு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 23,929 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. மேலும், 84 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2 நாட்களில் தொற்று பாதிப்பு மாநிலத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? புதிய அரசு எடுக்கப்போகும் முடிவு!
இதன் காரணமாக முதல்வர் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார். மாநிலம் முழுவதும் முன்னதாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகர்கள் பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக வியாபாரத்தை தாங்களாகவே முன் வந்து நிறுத்தி வருகின்றனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, வரும் மே 5ம் தேதி முதல் காலை 6 மணி முதல் நண்பகல் வரை மட்டுமே மக்களின் நடமாட்டடத்திற்கு அனுமதி அளித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் 144 தடை உத்தரவு நடைமுறைகள் அமலில் இருக்கும். நண்பகலுக்கு பின்னர் அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே வர மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்