தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பணி – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது கற்பித்தல் பணி இல்லாத காரணத்தால் இனி அவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
விழிப்புணர்வு பணி:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு படங்களை கற்பிப்பதில் அரசு கவனம் கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றது.
3 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு உத்தரவு!!
தமிழக அரசு, பேரிடர் காலத்தில் மாணவர்களை தேர்வுக்கு தயாராக வைப்பதினால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம் என்று கருதி 12ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் மற்ற வகுப்புகள் பள்ளிக்கு வர தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று வரை செய்முறை தேர்வுகள் நடந்தது. இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி நேரடியாக தேர்வுக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழக்கமாக ஊதியம் வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்து. தற்போது ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான அரசின் திட்ட பணிகளை வழங்குவது குறித்து நிதித்துறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு சுகாதாரத் துறையுடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்