இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,927 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4,97,669 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்:

உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. சீனா முழுவதும் 19 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இந்தியாவில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஒமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாவது அலையை தொடர்ந்து நான்காவது அலை தீவிரமடைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!

இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,927 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,68,799 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,28,126 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது கொரோனா பாதிப்பினால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,980 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04 % ஆக உள்ளது. மேலும் தினசரி தொற்று பரவல் விகிதம் 0.66% ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.61 % ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,693 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் விகிதம் 1 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 188.40 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 83.64 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!