குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – குரேஷி பதிலடி விளக்கம்!
சமூக வலைப் பக்கங்களில் ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான் பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருந்து வருகிறது எனக் கூறி தக்க பதிலடி கொடுக்கும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கவே எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை ஒதுக்கிவிட்டு ரசிகர்கள் இதற்காகவே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கடந்தவாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பயனடைந்தவர்கள் பற்றி நடுவர் வெங்கடேஷ் கூறியிருந்தார்.
மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் – வில்லியாக இருக்குமோ?
வெங்கடேஷ் பட் கூறியதைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். அதாவது ஒரு பெண் எட்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இதற்கு மேலும் உயிர் வாழ வேண்டாம் என நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது தான் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே மனநிம்மதி பெற்று தற்போது ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் என்கிற செய்தியை வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
வெங்கடேஷ் பட் கூறியதிலிருந்து ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தாலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கண்டவாறு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி பல மீம்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு வெங்கடேஷ் கூறியதில் எந்த தவறும் கிடையாது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பலரும் மகிழ்ச்சியுற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக குரேஷி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.