மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் – வில்லியாக இருக்குமோ?

0
மீண்டும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் - வில்லியாக இருக்குமோ?
மீண்டும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் - வில்லியாக இருக்குமோ?
மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிமுகமாகும் புதுமுகம் – வில்லியாக இருக்குமோ?

பாரதிகண்ணம்மா தொடரில் ஏற்கனவே இரண்டு புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்த உள்ளனர். அது வில்லி கதாபாத்திரமாக இருக்குமோ என ரசிகர்களின் மத்தியில் பேச்சுவார்த்தை எழுந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போதுதான் ஒன்றாக சேர போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதாவது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் கதையே முடிந்துவிடும். ஆனால், அதை மட்டும் செய்யாமல் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சீரியலை இழுத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை வீட்டை விட்டு விரட்டி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் பாரதிக்கு துளிகூட குறையவேயில்லை.

குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கோபி, வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

குடும்பத்திலுள்ள அனைவருமே கண்ணம்மாவிற்கு ஆதரவாக பேசும் போது கூட கண்ணம்மாவை எதிரியாகத் தான் பாரதி நினைத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மா என்னை ஏமாற்றி விட்டார் என்று மட்டுமே பாரதியின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நாம் தான் கண்ணம்மாவை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என நினைக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது சூழ்ச்சி வேலைகள் நடந்து அதனால் கண்ணம்மாவை மீண்டும் வெறுக்கும் படி ஆகிவிடுகிறது. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துவிட்டால் கதையே முடிந்துவிடும் என்பதற்காக சீரியலில் புதிதாக இரண்டு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினர்.

Exams Daily Mobile App Download

அதாவது சர்மிளா, விக்ரம் என இரண்டு கதாபாத்திரங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா அறிமுகப்படுத்தப்பட்டார். ஷர்மிளா வெண்பாவிற்கு பாரதிக்கும் திருமணம் செய்து வைப்பார் என நினைத்த நேரத்தில் வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விக்ரமும் அதேபோல தான் கண்ணம்மாவும் பாரதியையும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்து இருவரையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். இந்நிலையில் மீண்டும் பாரதிகண்ணம்மா தொடரில் புதிதாக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த புதிய கதாபாத்திரமும் பாரதியும் கண்ணம்மாவும் சேர உதவி செய்வார்களா அல்லது இருவரையும் பிரிக்க முயற்சி செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!