காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி – 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தற்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் இரண்டாவது போட்டியில் கயானா நாட்டை இந்திய மகளிர் அணி வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டி:
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்தாண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்றில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்கள் இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தாண்டு காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளுதூக்குதல், மல்யுத்தம் முதலான 16 போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், முதல் நாளான நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்திலேயே மிகவும் வலுவான வீரர்களை கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்த மோதலில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற லான் பவுல்ஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் தனியா சௌத்ரி 21-10 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து நாட்டு அணியுடன் மோதி தோல்வியை தழுவியது.
புத்தக பையை சுமக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மாநில அரசு அதிரடி முடிவு
இதனை தொடர்ந்து, இன்று இந்தியா டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் கயானா நாட்டுடன் மோதியது. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் இரண்டாவது போட்டியில் கயானாவை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை காட்டிலும் இந்தாண்டு மகளிர் பிரிவில் அதிக அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன.