குரூப் B, C பணியிடங்களுக்கான பொது தகுதித்தேர்வு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

0
குரூப் B, C பணியிடங்களுக்கான பொது தகுதித்தேர்வு - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
குரூப் B, C பணியிடங்களுக்கான பொது தகுதித்தேர்வு - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
குரூப் B, C பணியிடங்களுக்கான பொது தகுதித்தேர்வு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

நான்- கெஜட்டட் பிரிவில் பணியிடங்களுக்கு (குரூப் பி,சி) ஆட்சேர்ப்புக்கான பொது தகுதித் தேர்வு (CET) இந்த ஆண்டு முதல் நடைபெறும் என்று மத்திய பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முக்கிய அறிவிப்பு:

புதுதில்லி நார்த் பிளாக்கில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம், இந்திய பொது நிர்வாக நிறுவனம், சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனம், கிரித் கல்யாண் கேந்திராக்கள், குடிமைப்பணி சேவைகள் கலாச்சார, விளையாட்டு மத்திய வாரியம் ஆகிய ஆறு தன்னாட்சி அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை அமைச்சர் ஜிதேந்திர சிங் வகித்தார். அப்போது பேசிய அவர் துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும், பின் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் SSC, ரயில்வே ஆள்தேர்வு வாரியங்கள் மற்றும் ஐ.பி.பி.எஸ். சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, மேல்நிலை மற்றும் மெட்ரிகுலேட் என்ற 3 நிலைகளில் தொழில் நுணுக்கம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித் தேர்வுகளை இந்த முகமை (National Recruitment Agency) நடத்தும்.

Exams Daily Mobile App Download

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து முதல் நிலை தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு நிலை 2, 3 ஆகிய சிறப்பு தேர்வுகளை அந்தந்த ஆட்தேர்வு முகமைகள் வழக்கம் போல் நடத்தும். SSC பணிக்கான நிலை 1 தேர்வு மட்டுமே பொதுத் தகுதித் தேர்வின் கீழ் வரும். மேலும் நிலை 2, 3 ஆகிய தேர்வுகளை வழக்கம் போல் SSC, தேர்வாணையம் நடத்தும். மேலும் இரண்டாம் நிலை தேர்வு இல்லாமல் இந்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆள்தேர்வை செய்யப் போவதாக சில முகமைகள் முன்னதாக தெரிவித்துள்ளன. இந்த மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!