தமிழகத்தில் ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிகள் திறப்பு – பேராசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலையிலும் ஆகஸ்ட் 9ம் தேதியான நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கப்பட இருக்கிறது.
கல்லூரி திறப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலை மற்றும் பயிற்சி நிறுவனங்களும் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இதனால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூலை 27ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முடிந்த பிறகு வகுப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும். முன்னதாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், கல்லூரி, பல்கலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு தயாராக உள்ளது. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் முதலாம் ஆண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
TN Job “FB Group” Join Now
நாளை முதல் அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பேராசியர்கள் கல்லூரியில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி, பல்கலையிலும் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.