மாநிலம் முழுவதும் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை துவங்கலாம் என முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (அக்.25) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயின் வீழ்ச்சி காரணமாக பண்டிகைக் காலத்திற்குப் பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என்று மேற்கு வங்க மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அம்மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அடுத்த மாதம் மீண்டும் திறப்பதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொண்டது. இது தொடர்பான அறிக்கைகளின்படி, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அக்டோபர் இறுதிக்குள் சுத்தப்படுத்தும் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு – கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!
இந்நிலையில் அம்மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை ஆய்வு செய்த அரசு நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதி கொடுத்துள்ளது. குறிப்பாக பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (CISCE) தங்களது செமஸ்டர் போர்டு தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிடுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது. எவ்வாறாயினும், மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் அம்மாநிலம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் மட்டும் நேற்று (அக்.25) ஒரு நாளில் 273 பாதிப்புகளுடன் மொத்த பாதிப்பு 989 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.