தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்! முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்! முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்! முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்! முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உள்ளன. அதனை தொடர்ந்து பள்ளிகளில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து அடித்தகட்ட நடவடிக்கையாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தாலும் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த பள்ளிகள் திறக்கும் முடிவானது மருத்துவ குழு மற்றும் மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி தான் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தான் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 17% DA உயர்வு, தீபாவளி போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களை வழிநடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வாயிலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறதா? என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் அது தொடர்பான தலைமையாசிரியர் கூட்டம் பள்ளிக்கல்வி அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

நாளை மற்றும் அக்.30 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! CEO முக்கிய உத்தரவு!

அப்போது அவர் பள்ளியின் அனைத்து பகுதிகளிலும் வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை மற்றும் கழிப்பறைகள் என அனைத்தும் துாய்மை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும். போதிய முகக்கவசங்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் சானிடைசர் மற்றும் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். மழைக்காலம் என்பதால் கொசு மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!