நாளை மற்றும் அக்.30 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! CEO முக்கிய உத்தரவு!
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பிக்கப்படும் முக்கிய நாளான மருதுபாண்டியன் நினைவு நாள் அக்டோபர் 27 மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதி வர இருப்பதால் இரண்டு நாட்களும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் சிறப்பிக்கப்படும் முக்கிய விழாக்கள் , நாட்கள் மற்றும் பண்டிகையின் போது குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அன்றைய தினத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அதற்கு ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும்.
இனி கல்லூரி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ தேர்வுகள் கிடையாது – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அந்த வகையில், சிவகங்கை காளையார்கோயில் பகுதியை சேர்ந்த மருது பாண்டியர் நினைவு தினம் அக்டோபர் 27ம் தேதியான நாளை சிறப்பிக்கப்படுகிறது. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட வீரர்களின் முன்னோடிகளாக இருந்தனர். மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு – இலவச சேவையை கண்டுபிடிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!
பசும்பொன் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் 59வது குருபூஜை அக்டோபர் 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் அக்டோபர் 27ம் தேதியான நாளை மற்றும் அக்டோபர் 30ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.