இனி கல்லூரி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ தேர்வுகள் கிடையாது – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

2
இனி கல்லூரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
இனி கல்லூரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
இனி கல்லூரி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ தேர்வுகள் கிடையாது – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் டிசம்பர் மாதம் முதல் வழக்கம் போல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக அனைத்து விதமான செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதாவது 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல்கலை மற்றும் கல்லூரிகளிலும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பல்கலை மற்றும் கல்லூரிகளில்ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. கொரோனா குறையாத காரணத்தால் பின்பு தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமையல் போட்டி பற்றி சொல்லும் சந்தியா, முடியாது என மறுக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

அவ்வாறே அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே செமஸ்டர் தேர்வுகள் எழுத்தி விடைத்தாளை கல்லூரியில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி (9 – 12ம் வகுப்புகள் ) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பணி நியமன போட்டித்தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தொடக்க & நடுநிலை பள்ளிகள் வரும் நவ.1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி – தீபாவளி பரிசு அறிவிப்பு!

எனவே பல்கலை மற்றும் கல்லூரிகளில் இனிவரும் காலங்களில் வழக்கம் போல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதும் வகையில் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலை சார்பில் இணைப்பு கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார் உள்ளிட்ட அனைத்து பல்கலைகளும் நேரடி செமஸ்டர் தேர்வுகளையே நடத்த உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!