சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று பாதிப்படைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தினர் முதல் நல்ல வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான முதலீடாக தங்கம் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் மக்கள் அதிகம் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். அதுவும், இந்த மாதத்தில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர உள்ளது.
மாநிலம் முழுவதும் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
இதனால் அனைவரின் கவனமும் தங்கத்தின் மீது தான் திரும்பும். ஆனால் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமிற்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு – கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.36,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.4,538-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.