இந்தியாவிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி – சேவையில் பாதிப்பு இல்லை!!
அமெரிக்காவை சேர்ந்த சிட்டி வங்கி இந்தியாவின் ரீடெய்ல் பிரிவில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான சந்தையில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிட்டி வங்கி
இந்தியாவில் வெளிநாட்டு பிரிவில் முதலிடத்தில் இருக்கும் சிட்டி வங்கியால் நிதி சேவை பிரிவில் சாதிக்க முடியவில்லை என்பதால், இந்தியாவின் ரீடெய்ல் பிரிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கியமான வங்கிகளில் ஒன்றான சிட்டி பேங்க் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, போலந்து, ரஷ்யா, இந்தோனேஷியா, கொரியா, மலேசியா, பஹ்ரைன், பிலிபைன்ஸ், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த வகையில் ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரகம் மற்றும் லண்டன் ஆகிய சந்தைகளில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக சிட்டி வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி பேங்க் இந்தியாவில் 34 கிளைகளில் செயல்பட்டு வருகிறது. 12 லட்சம் வங்கி கணக்குகளும், 22 லட்சம் கிரிடிட் கார்டு வாடிக்கையாளர்களும் உள்ள இவ்வங்கியில் 4000 பணியாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். தவிர இவ்வங்கியில் மும்பை, பூனே, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உள்ள கிளைகளில் 20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்று முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பொது முடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்தியாவிலிருந்து விலக்கம் குறித்து சிட்டி பேங்க்கின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி ஜேன் ஃப்ரேசர் தெரிவிக்கையில், ‘சிட்டி வங்கியின் முதலீட்டையும் பணியாளர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ஸ்டிடூஷன் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம்’ என கூறியுள்ளார். இதன்படி சிட்டி பேங்க் இந்தியாவின் சேமிப்பு கணக்கு, தனி நபர் கடன், கிரிட் கார்டு ஆகிய சேவைகளில் இருந்து விலகுவதாக சிட்டி வங்கி முடிவெடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் ரீடெய்ல் பிரிவை வாங்குவதற்காக மற்றொரு நிறுவனத்தை தேடி வருவதாகவும் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கியின் தற்போதுள்ள செயல்பாடுகள் வழக்கம் போல தொடரும்.