இன்று முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பொது முடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொது முடக்கம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் தொற்று அதிகமாக உள்ள மாநிலங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேஷ், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதேபோல சில மாநிலங்களில் 15 நாட்கள் வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 48 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5307 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகமாக காணப்படுவதால் அம்மாவட்டத்தில் 11 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணையவழி தேர்வு – பொறியியல் கல்லூரிகள் அதிருப்தி!!
அதன்படி ஏப்ரல் 16 ஆம் அதாவது தேதி இன்று முதல் 26 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு அம்மாவட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஜாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் ரிதேஷ் அகர்வால் அறிவித்தபடி பொதுமக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.